கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், மின்வெட்டு காலத்தை மேலும் குறைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது நீர்மின்சாரத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத் திறன் 25 கிகாவோட் மணிநேர வரம்பில் இருப்பதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், அடுத்த வாரம் மின்வெட்டை குறைத்தால் மட்டும் போதாது எனவும் தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய நீர் மின் உற்பத்தி திறனை கருத்திற்கொண்டு மின்வெட்டு காலத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றும் நாளையும் ஒரு மணிநேரமாக மின்வெட்டு குறைக்கப்படும் எனவும், ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மாத்திரம் மின்சாரம் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு முன்பு போன்று மின்சாரம் தடைப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.