வரக்காபொல பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (14) மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன 24 வயதுடைய இளைஞனின் சடலமும் சற்று நேரத்திற்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக அகுர்வெல்ல வரக்காபொல வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் உள்ள தும்பலிஎத்த பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளின் ஆதரவுடன் 8வது லயன் ரெஜிமென்ட் படையினர் நேற்று மீட்பு பணியை ஆரம்பித்ததுடன், குடும்பத்தின் தந்தை நேற்று மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இன்று காலை தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் 24 வயதுடைய மகனின் சடலமும் சற்று முன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.