விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தால், உயர் பருவத்திற்காக 150,000 மெற்றிக் தொன் யூரியாவை கொள்வனவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்ட டெண்டருக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யூரியா உர விநியோகத்திற்கான டெண்டரை சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன்படி, 2022, 2023 பருவத்திற்குத் தேவையான யூரியா உரம் குறிப்பிட்ட திகதிகளுக்குள் இலங்கையை வந்தடைய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.