(எஸ்.அஷ்ரப்கான்)
யு.எஸ்.எப்.சிறீலங்கா அமைப்பின் 6 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு செயற்பாட்டாளர்களுக்கிடையில் யு.எஸ்.எப். டைகர், யு.எஸ்.எப்.பைட்டர்ஸ்,
யு.எஸ்.எப்.வேறியர்ஸ் என 3 அணிகளாக பிரிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ முக்கோண சுற்றுத் தொடர் அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.எஸ். இர்சாத் தலமையில் கமு/ லீடர் அஷ்ரஃப் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் விஷேட அதிதிகளாக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.சரிபுதீன், இளைஞர் சேவை அதிகாரி எம். இலாஹி, அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கபூர் அன்வர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் ஏ.சி. றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டிக்கு யு.எஸ்.எப்.பைட்டர்ஸ், யு.எஸ்.எப்.வோறியர்ஸ்
ஆகிய இரு அணிகள் மோதினர்.
8 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டியில் முதலில் யு.எஸ்.எப்.வோறியர்ஸ் துடுப்படுத்தாடி 72 ஒட்டங்களை வெற்றி இலக்காக
நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பத்தாடிய யு.எஸ்.எப்.பைட்டர்ஸ் அணி 6.5 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 41 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனடிப்படையில் யு.எஸ்.எப்.வோறியர்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனானது.
பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.