ஈரானின் புகழ்பெற்ற எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் நீதிமன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் பரவிய அரச எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் எவின் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, சிறையில் தீப்பிடித்ததாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.