அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது மைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கொண்டு உரையாற்றுகையில் . அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது குறித்தும் அதன்போது, பல அத்தியாவசிய பொருட்களினுடைய விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிடடார்.
அதற்கமைய, பருப்பு கிலோவொன்றினுடைய விலை 685 ரூபாவிலிருந்து தற்போது 398 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும், நாட்டு அரிசியினுடைய கிலோவொன்றினுடைய விலை 220 ரூபாவிலிருந்து குறைந்து 165 ரூபாவாகவும், வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றினுடைய விலையானது 210 ரூபாவிலிருந்து தற்போது 160 ரூபாவாகவும், சீனி கிலோவொன்றின் விலையானது 375 ரூபாவிலிருந்து தற்போது 275 ரூபாவாகவும், கோதுமை மா கிலோவொன்றினுடைய விலையானது 395 ரூபாவிலிருந்து தற்போது 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளர் மேலும், தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பால்மாவினுடைய விலையில் எந்தவித குறைப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் இந்த விலை குறைப்பு தொடர்பான சந்தை நிலைமைகளை தொடர்பில் வர்த்தக அமைச்சர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக விளக்கமளிப்பாரென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.