நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட பெட்ரோலிய தயாரிப்பு சிறப்பு உத்தரவு திருத்த மசோதாவுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதற்காக எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நிபந்தனையின்றி ஒன்றிணையப் போவதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் ஊடாக எரிபொருள் விலையை தீர்மானிக்கும் அரசாங்கத்தின் அதிகாரம் இல்லாதொழிக்கப்படும் என பெற்றோலியம் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தின் மூலம் மேலும் பல சப்ளையர்களுக்கு இலங்கையின் கனிய எண்ணெய் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என, பெற்றோலிய பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பில் அதற்கு ஆதரவாக 77 வாக்குகள் கிடைத்தன. எதிராக 17 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.