பாதுகாப்புப் படையினர் பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்துள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தலின் அடிப்படையில் ஜம்பதவீதிய பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டு காயங்களுக்குள்ளான சம்பவம் தொடர்பிலான பல உண்மைகளை விசேட அதிரடிப்படையினரால் வெளிக்கொணர முடிந்தது.
கடந்த 22ஆம் திகதி முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் ஜம்பதவீதி 101 தோட்டத்திற்கு அருகில் உள்ள மீன் கடைக்கு அருகில் தங்கியிருந்த செல்லராஜா கிறிஸ்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான செல்லராஜா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியை கண்டுபிடித்தனர்.
தற்போது இந்தியாவில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரி புகுதுகண்ணா கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கருத்து முரண்பாட்டின் விளைவாக இது இடம்பெற்றுள்ளதாகவும், தாக்கப்பட்டவர் குடு செல்லி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் உறுப்பினர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள், இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இளவாலை மடகல்லின் கிழக்கு கடற்கரையில் படகில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 95 கிலோ கேரள கஞ்சாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கேரள கஞ்சா கையிருப்பு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விபரங்களை வலன ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு, 27 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.