தெற்கு சோமாலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜிஹாதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய 50 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
கிஸ்மாயோவில் உள்ள ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து மக்களை சுட்டுக் கொன்ற மூன்று தாக்குதல்காரர்கள் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நான்காவது தாக்குதலாளி ஹோட்டலின் நுழைவாயிலில் தனது காரை வெடிக்கச் செய்து இறந்துள்ளார்.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு தாங்கள் தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளது.