பிலிப்பைன்ஸில் உள்ள மக்டன்-செபு சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்க முயன்ற கொரியா விமானம் சறுக்கி விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சியோலில் இருந்து செபு நகருக்குச் சென்ற Airbus SE A330 விமானம் தரையிறங்கும் மூன்றாவது முயற்சியில் விபத்துக்குள்ளானதாகவும், மோசமான வானிலை இதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் 173 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நன்றி : BBC