வரிகளை அதிகரிப்பதன் மூலம் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திர தேசிய சபை இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எம்.பி., உள்நாட்டு இறைவரி சட்டத்தில் அரசாங்கம் புதிய திருத்தங்களை கொண்டு வருவதன் பின்னர் பல வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என தெரிவித்தார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அதிக பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி குணபால ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.