நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்துக்குரிய மைத்திரி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) காலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேலும், சர்வதேச லயன்ஸ் கழகம் 306 C 2 பலாங்கொடை லயன்ஸ் கழகம் இந்த மருந்தை நன்கொடையாக வழங்குவதற்கான கோரிக்கையின் பேரில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.