இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமின்றி அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கக் கூடாது என பாஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
உரிய பதவிகளுக்கு இந்த நாட்டில் ஆட்கள் கிடைக்காவிட்டால் அது பாரிய அவலமாகும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் குடிவரவு திணைக்களத்திடம் தகவல் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.