உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க், ட்விட்டர் வலையமைப்பைக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்து டுவிட்டரின் உரிமையை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எலோன் மஸ்க் தனது பரிவர்த்தனையை முடித்த பிறகு, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட பல பதவிகளில் இருந்தவர்கள் வேலையை விட்டு வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.