விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத பாதுகாப்புப்படை உறுப்பினர்களுக்கு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் அமுலில் இருக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 25 அல்லது அதற்கு முன் விடுமுறை இல்லாமல் பணிக்கு வராத பாதுகாப்புப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே பொதுமன்னிப்பு காலம் செல்லுபடியாகும்.
அந்த குழுவிடம் இருந்து பணம் ஏதேனும் இருப்பின் சட்டரீதியாக வெளியேறும் முன் அந்த பணத்தை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.