நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக இலங்கை மருந்து வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மருந்துகளுக்கு நீண்டகாலமாக தட்டுப்பாடு நிலவி வருவதாக அதன் தலைவர் மருந்தாளுனர் கபில டி சொய்சா தெரிவித்துள்ளார்.
மருந்து விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய பங்களிப்பை வழங்காமையும் மருந்துகளின் விலையை துரிதமாக அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை மருந்து வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் மருந்தாளுனர் கபில டி சொய்சா மேலும் தெரிவித்தார்.