பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் இன்று (31) கையொப்பமிட்டுள்ளார்.
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 10 ஆகஸ்ட் 2022 அன்று அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர், அதற்கு எதிரான மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நீதித்துறை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
கடந்த ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இரண்டாம் வாசிப்பின் முடிவில் அதற்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டன
எதிராக 1 வாக்கு மட்டுமே கிடைத்தது.
அதனையடுத்து, திருத்தங்கள் இணைக்கப்பட்டதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன.
இதன்படி, இருபத்தி ஒன்றாவது அரசியலமைப்பு திருத்தமாக இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று (31) முதல் அமுலுக்கு வரவுள்ளது.