கெபதிகொல்லேவ ரம்பகெப்பு குளம் பகுதியில் கிராம மக்களால் தாக்கப்பட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 04 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காட்டு யானை தாக்கி ரம்பகபுவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பிரதேசவாசிகள் சிலர் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, போலீஸ் அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளான நபரின் சடலத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அகற்ற முற்பட்ட போது, ஆத்திரமடைந்த மக்கள் குழு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் சுனில் அங்கம்பொடி என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு தனது கோழிகளை பராமரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.