பாணந்துறை றோயல் ஆரம்ப பாடசாலையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்து பாணந்துறை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அருகில் இருந்த வீடு எரிந்ததால் ஏற்பட்ட புகை காற்றுடன் பாடசாலை மைதானத்துக்கு வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.