கொரிய தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும், புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் நேற்று (01) இரவு கொரியாவுக்கு பயணித்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது தற்போது கொரியாவில் பணிபுரிந்து வரும் இலங்கை தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து கொரிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இந்நாட்டு தொழிலாளர்களுக்கு புதிய கொரிய தொழில் வாய்ப்புகளை திறந்து வைப்பது குறித்து அமைச்சர் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தவுள்ளார்.
அங்கு இந்நாட்டு தொழிலாளர்களுக்காக திறக்கப்படக்கூடிய புதிய களங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், முதலாளிகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
தொழிலாளர் துறை தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்களும் குறிப்பாக கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
மேலும், கொரியா பொருளாதார துறையில் உயர் முன்னேற்றத்தை அடைய தொழிலாளர் சட்டங்களை எவ்வாறு தயாரித்துள்ளது, அத்துடன் தொழிலாளர் வளங்களை பொருளாதார ரீதியாக பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கும் அதை இலங்கையுடன் தொடர்புபடுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.