சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் இன்று (02) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சம்பளம், ஓய்வூதியம், பதவி உயர்வு நடைமுறை, நிரந்தர நியமனம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வுகாண அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் சமுர்த்தி திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.