இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு சமகி ஜன பலவேகய எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி மீளப்பெறுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காமினி அமரசேகர, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மேற்படி ஆணைக்குழுவின் 11 உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.