திலினி பிரியமாலி சிறைச்சாலையில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட பொருளான கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேகநபர் இன்று (3) வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையிலான சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டை மேலதிக விசாரணைக்காக கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி 24.11.2022 வரை ஒத்திவைத்ததாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.