தென்கொரியாவில் இடம்பெற்ற ஹாலோவீன் விருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்தோஷ் வொன்ஜின் ஜியோங் ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் தலைநகரான சியோலில் உள்ள Itaewon பகுதியில் இடம்பெற்ற Halloween விருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி உத்தலவின்ன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய முகமது ஜினாத் என்பவருடைய குடும்பத்திற்கே குறித்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
உயிரிழந்த நபர் கல்விக்காக தென்கொரியாவிற்கு சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நேற்று தெரிவித்துள்ளது. எனினும், அவர் அகதி விசாவில் தென்கொரியாவில் தங்கியிருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.