நெருங்கிய தொடர்பு மூலம் குரங்கு வைரஸ் பரவும் எனவும் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இவ்வாறான தொற்றுக்குள்ளான ஒருவர் இந்நாட்டில் இருந்து பதிவாகியிருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நோய்க் கட்டுப்பாட்டு முறை சரியாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நபரை விரைவாக அடையாளம் காண முடிந்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
குரங்அம்மை நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நெருங்கிய தொடர்பு மூலம் மட்டுமே பரவும் என்றும், அது பல்வேறு வழிகளில் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினர்.
இந்த நோய் சிக்குன் குனியா போன்றது எனவும், இவ்வாறான வைரஸ் பாதிப்புகள் அவ்வப்போது ஏற்படும் எனவும், எனினும், இந்நோய் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை சுகாதார திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தேனா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன,
“நேற்று, இந்த நாட்டில் முதல் குரங்கு காய்ச்சலான நோயாளி பதிவாகியுள்ளார். 19 வயதுடைய இளைஞன், கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரது மாதிரிகளை 02 ஆம் திகதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி, அந்த நபரை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
நேற்று, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், நோயாளிக்கு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவக் கண்காணிப்பில் அவர் நலமுடன் உள்ளார்.
மேலும் அவரது நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
“இது ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. நம் நாட்டில் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு முறையாகச் செயல்படுகின்றது. அதன் காரணமாகவே இந்த நோயாளியையும் அடையாளம் காண முடிந்தது.
இதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான அனைத்து வசதிகளும், மருந்துகளும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளன.
“நோயாளிகள் பற்றிய செய்திகளை வெளியிடும் போது அவர்களின் பெயர்கள் மற்றும் கிராமங்கள், சேருமிடங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த தவறு கோவிட் தொற்றுநோய் காலத்திலும் செய்யப்பட்டது. இதனால் நோயாளிகள் மருத்துவ பரிசோதனைக்கு வர முடியாத நிலை உள்ளது. அதுவும் நடக்கக்கூடாது. சந்தேகத்திற்கிடமான நோயாளி இருந்தால், அருகில் உள்ள சுகாதார நிறுவனத்தைப் பார்க்கவும். உங்கள் அடையாளத்திற்குச் சிக்கலாக இருக்கும் எந்தத் தகவலையும் நாங்கள் ஊடகங்களுக்கு வழங்க மாட்டோம்.
இந்த ஆண்டு மே மாதம் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இது ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் பரவி தற்போது குறைந்து வருகிறது.
தெற்காசிய நாடுகளில், இதுவரை 23 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு நோயாளி இறந்துள்ளார்.
உலகளவில் 73,434 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அதில் 29 நோயாளிகள் மட்டுமே இறந்துள்ளனர்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.