சீனி வரி குறைப்பு சம்பவம் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடுத்த வாரம் 2020 இல் பெற்றுக்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், அறிக்கை கிடைத்த பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கை தயாரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், சீனிக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட விசேட சரக்கு வரி கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவிலிருந்து 25 காசுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் நுகர்வோருக்கு நன்மை கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ருவன்வெல்ல, வண்டல பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேலும் தெரிவித்தார்.