ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் எகிப்தின் கெய்ரோவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் 1978 ஆம் ஆண்டு தனது முதல் இலங்கை விஜயம் குறித்தும் பிரதிபலித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் குழுவினர் இன்று அதிகாலை எகிப்தின் கெய்ரோவிற்கு புறப்பட்திருந்தனர்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், ஜனாதிபதியின் சுற்றாடல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் தினுக் கொழும்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.