முச்சக்கர வண்டிகளுக்கான QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 5 லீற்றராக இருந்த கோட்டா 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இன்று (6) இரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளாக பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்.