தொகுதி எல்லை நிர்ணய தேசிய குழுவின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சசந்தன ஜனதா சபையினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், அதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமது குழு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.