எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ருவரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன், COP-27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்தின் Sharm El Sheikh (Sharm El Sheikh) சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரூட் பஹோருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று (07) இடம்பெற்றுள்ளது.
ஸ்லோவேனியா ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவான் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.