அனைத்து நாடுகளின் விவசாய அமைச்சர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான உணவுத் தேவையை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்து ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் “உணவுப் பாதுகாப்பு” தொடர்பான வட்டமேசை விவாதத்தில் கலந்துகொண்டு இன்று (07) ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசர கடன் நிவாரணத் திட்டத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த நிலையான கடன் நிவாரணத் திட்டம் 2023 பெப்ரவரிக்குள் தயாரிக்கப்பட்டு 2023 முதல் காலாண்டின் இறுதிக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் நாடுகளின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலிம்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் முழு விவரம்…
இன்று, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்படி, 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் இரண்டு வகை.ஒன்று இனி உணவு இல்லாத நாடுகள். அதாவது, விலைவாசி உயர்வு காரணமாக உணவை வாங்குவதற்கு வசதியில்லாத அல்லது சொந்த உணவை உற்பத்தி செய்ய முடியாத நாடுகள். மற்றொன்று, பாரம்பரியமாக போதுமான உணவுப் பொருட்களைக் கொண்டிருந்த நாடுகள், ஆனால் விலைவாசி உயர்வினால் வாங்க முடியாத நாடுகள்.
கடந்த பருவத்தில் உரப்பிரச்சினை காரணமாக இலங்கையில் உணவு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும், எம்மால் நடைமுறைப்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பிற்கான கூட்டுப் பொறிமுறையின் ஊடாகவும், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அண்மையில் உரங்களை கையிருப்பில் பெற்றுக்கொள்ள முடிந்தது. இருந்தும் நம் நாட்டில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்குப் பொருளாதார பலம் இல்லாதவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
இவ்விரு பகுதிகளையும் சேர்ந்த நாடுகளுக்கு தேவையான உணவு வழங்கப்படுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். அந்த மக்களுக்கு உணவு வழங்க நிதி உதவி தேவை. இந்த இரண்டு வகைகளுக்கும் பொதுவானது கடன் வட்டி உயர்வு. அதிகரித்து வரும் கடன் செலவுகள் வளரும் நாடுகளின் முழு மக்களுக்கும் உணவு விநியோகத்தை உறுதி செய்வதை மிகவும் கடினமாக்கியுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியம், உணவு மற்றும் உரங்களின் விலை உயர்வால் தாங்க முடியாத நிலை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 48 நாடுகளில் வட்டிச் செலவு அதிகரிப்புடன் உணவு இறக்குமதியில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பொருள் இந்த இரண்டு வகை நாடுகளுக்கும் கடன் நெருக்கடிக்கு ஒரு தீர்க்கமான தீர்வு தேவை.
இந்தச் சூழலைச் சரியாகச் சமாளிப்பதற்கான பொதுவான திட்டமோ அல்லது மையமோ தற்போது இல்லை என்று தெரிவிக்கின்றது.
ஆகவே ஐக்கிய நாடுகள் சபை, COP, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP) உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இணைந்து அந்த மையத்தை நிறுவ வேண்டும்.
மேலும்,COP27 இன் தலைவர் என்ற முறையில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உணவுத் தேவைகளை மதிப்பிடுவதற்காக அனைத்து நாடுகளின் விவசாய அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி உணவு நிலைமை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எகிப்து ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை நான் அழைப்பு விடுக்கின்றேன்.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய, பலதரப்பு நிதி ஆதாரங்களுடன் நெருக்கமாகச் செயல்படும் வகையில், நிலையான கடன் நிவாரணத் திட்டம் அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். இந்தத் திட்டம் பிப்ரவரி 2023க்குள் தயாரிக்கப்பட்டு 2023 முதல் காலாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், அந்த நாடுகளின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஈடுசெய்ய முடியாததாக இருக்கும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். வரவிருக்கும் COP28 மாநாட்டில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடுத்தர காலத் திட்டத்தைத் தொகுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதையும் சொல்ல வேண்டும்.