வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இவர்களை அழைத்து வருவதற்கு இலங்கை அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் கப்பல் மூலம் அந்த குழுவினர் மீட்கப்பட்டனர்.
மீட்கப்படும் போது கப்பலில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.