இந்நாட்டின் கடன் முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவாவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அது எகிப்தில் “COP 27” காலநிலை மாற்ற உச்சிமாநாட்டின் போது. இந்த கலந்துரையாடலில் கானாவின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் ஆகியோரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.