சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்கா தூதுவர் ஜூலி ஜே சான் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பட்டிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தூதுவர் அனுராதா யஹம்பத்தை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமெரிக்கா நாட்டின் தூதுவராக பதவியேற்றதன் பின்னர் ஜூலி ஜே சான் கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
அமெரிக்கா விவசாய திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கால்நடை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பால் பண்ணையாளர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த தூதுவர், நாட்டில் வழக்கமான உள்நாட்டு விமானச் சேவையை அமைப்பதில் தலையிடுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.