பண்டாரகம மில்லனிய பிரதேச பாடசாலையொன்றில் மாணவர்கள் சிலரை தாக்கிய சம்பவத்தை பிரயோகித்து முழு கற்பித்தல் முறைமையையும் தவறாகப் பார்க்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் கல்வி உளவியல் பிரிவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார். .
நேற்றிரவு ஒளிபரப்பானவானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மில்லனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பலரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை அதிபர் உள்ளிட்ட மூவரையும் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிக்க மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கை ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.