மன்னார் ஆயர் பிடல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ மற்றும் குருக்கள் குழுவினர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
மன்னார் பிரதேசத்தில் நிலவிவரும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.