புதிய வரி விதிப்பின் காரணமாக பாடசாலை உபகரணங்ளான புத்தகங்கள், காலணிகள் மற்றும் சீருடைகளின் விலைகள் ஏறக்குறைய மூன்று மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பாடசாலை உபகரணங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஜகத் குமார ஆகியோரும் இதில் தலையிட்டு கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாளான இன்றும், நாடாளுமன்ற வளாகத்தில் விவாதம் நடைபெற்றது.