அடுத்த ஆண்டு 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் பெருமையை பறைசாற்றும் வகையிலான கலைப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், புதிய கலைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்ட மூத்த ஓவியர் ஐ.எச்..எஸ்.சரத்தின் 50வது தனிக் கலைக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
மேலும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சித்திரக் கண்காட்சியை பார்வையிட்டதுடன், கண்காட்சியை பார்வையிட வந்த இரு பாடசாலை மாணவிகள் இந்நாட்டின் கல்வி முறையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பான திட்டமொன்றையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி .ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்துகளை தெரிவிக்கையில்.
“.ஐ.எச்..எஸ்.சரத்துடன் எனது உறவு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்கின்றது. நான் இளைஞர் விவகாரம் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அவரது கலைக் கண்காட்சிகளில் கலந்து கொண்டேன். இளைஞர் விவகாரங்கள் மற்றும் கல்வி அமைச்சின் பணிகளில் அவர் பங்கேற்றும் செயற்பட்டார். அதன் மூலம் அவருடைய கலைத் திறமையை அடையாளம் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மேலும். கல்வி அமைச்சு இசுருபாவிற்கு மாற்றப்பட்டபோது, ஐ.எச்..எஸ்.சரத்திடம் அமைச்சர் அலுவலகத்திற்கு ஒரு படத்தை வழங்க முடியுமா என்று கேட்டார். அன்று, சலலிஹினி நினைவுச் சின்னத்தை சித்தரிக்கும் பெரிய ஓவியம் ஒன்றைக் கொடுத்தார். எனக்குத் தெரிந்தவரை, துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் இன்று இல்லை. பெரிய தொகைக்கு விற்கலாம் என்பதால் யாரோ வீட்டில் கொண்டுபோய் வைத்திருந்திருக்க வேண்டும். இருப்பினும், ஐ.எச்..எஸ்.சரத் பல்வேறு வகையான பணிகளில் பங்கேற்றார். அவரது திறமை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்தப் படங்களைப் பார்த்தாலே புரியும்.எனவும் குறிப்பிட்டார் “