இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வதிவிடமற்றவர் எனவும் அவர் இலங்கைப் பிரஜாவுரிமையின்றி இந்த நாட்டில் பொறுப்பான பதவியை வகித்தமை சட்டத்திற்கு முரணானது எனவும் மனுவிற்காக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த மனுவை அவசர வழக்காக கருதி, அதன் உண்மைகளை உறுதிப்படுத்த குறுகிய திகதியை வழங்குமாறு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.