முதலீட்டாளர்களை ஈர்க்க, தற்போதுள்ள முதலீட்டு தொகுப்பு போதுமானதாக இல்லை என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ஆலோசனைக் குழு தெரிவிக்கின்றது. இதன் காரணமாக மத்திய வங்கியும் கருவூலமும் உண்மைகளை தெளிவுபடுத்தி முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொகுப்பு ஒன்றை தயாரிக்க வேண்டும் என முதலீட்டு சபைக்கு ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பாக ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது தெளிவான புரிதல் இருக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கை மத்திய வங்கிக்கும் திறைசேரிக்கும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டியது அவசியமானது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்ததோடு தற்போதுள்ள தொகுப்பின் கீழ் எத்தனை திட்டங்கள், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு முதலீட்டுச் சபைக்கு குழு அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், முதலீட்டாளர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள், முதலீட்டுச் சபை என்ற வகையில், மிகக்குறைந்த அளவே உள்ளதாக, முதலீட்டுச் சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் வரிச்சலுகை நீக்கப்பட்டதால் முதலீட்டாளர்களின் வருகை குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றை விரிவுபடுத்தும் நோக்குடன் முதலீட்டுக்காக வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்யும் வகையில் சட்டங்களை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் சத்திய கூறுகள் இருக்கின்றதா என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.