விவசாய சேவை நிலையங்களில் இருந்து விவசாயிகளுக்கு யூரியா மூட்டைகளை எடையிட்டு அவற்றை விநியோகிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்,பெமதுவ விவசாய சேவை நிலையத்தில் பதிவான சம்பவத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த முறையினால் விவசாயிகள் விவசாய சேவை நிலையங்களில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசாங்கத்தின் உரத் திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதால் இந்த முறையை முறையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், பேமதுவையில் உள்ள உரக் கிடங்கிற்கு சீல் வைக்க சிலோன் கொமர்ஷல் உர நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. உர வெளியீட்டின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை இந்தக் களஞ்சியசாலை சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதற்கமைவாக அந்தப் பிரதேச விவசாயிகள் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இலங்கை கொமர்ஷல் உர நிறுவனம் மேலதிக யூரியா உர பாரவூர்திகள் சிலவற்றை அப்பகுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.