உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவது தமது பொறுப்பு என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப அந்தப் பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெஃபெரல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தமது ஆணைக்குழுவினால் எவ்வித தடையும் இல்லை என வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.