பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டமூலம் எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டமூலம் தற்போது நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்பட முடியாது என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.