ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
மன்னார் நகருக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டார்.
மேலும்,நெடுகுடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மீனவ மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நெடுகுடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதோடு, அது தொடர்பில் துரித கதியில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்.மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தை அவதானித்த ஜனாதிபதி, காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானித்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.