மாளிகாவத்தை போதிராஜா மாவத்தை பகுதியில் வைத்து மூன்று வாள்கள் மற்றும் கத்தியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்,சந்தேக நபர் இன்று (20) மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.