கிளைபோசேட் மீதான தடை 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. அதன்படி விவசாய அமைச்சர் மஹிந்த அரமவீர இன்று கிளைபோசேட் தடையை நீக்குவதற்கான வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளார்.
வர்த்தமானி அச்சிடுவதற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கையில் கிளைபோசேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
மேலும்,கிளைபோசேட் தடை செய்யப்பட்ட போதிலும் சிலர் சட்டவிரோதமான முறையில் தரமற்ற கிளைபோசேட்டை கடல் மார்க்கமாக இறக்குமதி செய்து அதிக விலைக்கு விநியோகம் செய்து வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே கிளைபோசேட் மீதான தடையை பேணுவது பயனற்றது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயத் துறையில் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்று முறை இல்லாத காரணத்தினால் க்ளைபோசேட் தடை காரணமாக விளைச்சல் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.