நாடு தற்போது எதிர்நோக்கி வரும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்கள் பிரபலமான தீர்மானங்கள் அல்ல என்பதனால் அந்த தீர்மானங்களில் சில பகுதிகள் பாதிக்கப்படலாம் என மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதில் திறமையும் தகுதியும் உள்ளவர்கள் நீண்டகாலம் அந்தப் பதவிகளில் இருந்திருந்தால் நாடு இந்த நிலையை அடைந்திருக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.