யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரதேசத்தில் போலியான வங்கி ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களைப் பயன்படுத்தி 120 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்கப் பொருட்களை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தெரியவருவதாவது நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 34 மற்றும் 36 வயதுடைய இரு சந்தேக நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தெரியவந்துள்ளது.