பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஆசிரியர் ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1,299 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட வகுப்புகளை நடத்துபவர் எனவும் சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியுள்ள மாவனல்லை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.