நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ்.சத்யானந்தா இன்று பதவியேற்றார். நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட டபிள்யூ.எஸ்.சத்தியானந்தா, அமைச்சின் செயலாளராக வருவதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட செயலாளராக கடமையாற்றினார்.
மேலும்,அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேலாண்மை இளங்கலை பட்டம் பெற்றவர் மற்றும் ஆஸ்திரேலியாவின் லாரோப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ் சத்தியானந்த பதவியேற்கும் நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ, தெனுகா விதானகமகே, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.